search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட்"

    கடைசி ஒருநாள் போட்டியில் 14.5 ஓவரிலேயே 105 ரன்களை எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஜடேஜாவின் (4) அபார பந்து வீச்சால் 104 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை முதலில் சந்திக்க இருவரும் திணறினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் அரைசதம் அடிக்க இந்தயா 14.5 ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 எனக்கைப்பற்றியது.
    குல்தீப் யாதவ், விராட் கோலி ஸ்டன்னிங் ரன்அவுட், கலீல் அஹமது பந்து வீச்சாளர் வெஸ்ட் இண்டீஸ் 224 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

    ஹேம்ராஜ், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேம்ராஜ் 14 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். 2-வது மற்றும் 3-வது போட்டியில் அச்சுறுத்திய ஷாய் ஹோப்பை ஸ்டன்னிங் ரன்அவுட்டால் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். அத்துடன் தொடக்க வீரர் பொவேலை விராட் கோலி ரன்அவுட் மூலம் வெளியேற்றினார்.



    இதனால் 20 ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 25 ரன்கள் வரை தாக்குப்பிடித்தது. 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹெட்மையர் எல்பிஎடபிள்யூ மூலம் வீழ்த்தினார் கலீல் அஹமது. அத்துடன் மட்டுமல்லாமல் ஆர் பொவேல் (1), சாமுவேல்ஸ் (18) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியால் மீண்டு வர இயலவில்லை. கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 100-ஐத் தாண்டியது.



    ஜேசன் ஹோல்டர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். 37-வது ஓவரின் 2-வது பந்தில் ரோச் 6 ரன்களில் க்ளீன் போல்டு ஆக வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. குல்தீப் யாதவ், கலீல் அஹமது தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
    உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில் இந்திய அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #TeamIndia
    நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர் நாயகன் விருதை பெற்று அசத்தினார்.

    மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடும் ஷுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார்.

    அதன்பின் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று அசத்தி வருகிறது. தற்போது தியோதர் டிராபி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.



    இதனால் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்திய அணியில் விளையாடுவது குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த தொடரில் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரன் குவிப்பால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார்.
    ×